Skip to main content

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1)
அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும், காலம் காட்ட சந்திரனையும், பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான்.
நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள்.
சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.
ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம்.
"வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்!'' (10:101)
வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். (12:105)
என அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது.
மனிதன் பூமியை திடமானதாகவும், பரந்து விரிந்ததாகவும், நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,
"அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். "(40:64)
பூமியை நமது அளவில் நிலையானதாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். அதனால்தான் நம்முடைய பார்வையில் பூமி தட்டையாகவும், அசையாமல் நிலையாக நிற்பது போலவும் சூரியனும் சந்திரனும் பூமியைச் சுற்றி வருவது போலவும் தோன்றுகிறது.
முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது பூமியின் வடிவம்தான்.
பூமி "உருண்டை" வடிவம் அதாவது பந்தின் வடிவம் என்று விஞ்ஞானிகள் கதறினாலும் மிகப் பெரிய பந்தின் மீது எப்படி கீழே விழாமல் நிற்க முடியும் என்று மனிதன் நினைப்பதால் தன் பார்வையில் தட்டையாக தோன்றும் பூமியை பந்துபோல கற்பனை செய்ய மனிதனால் முடியவில்லை.
மனிதன் "தட்டை பூமி" கண்ணோட்டத்திலிருந்தே சூரியனையும் சந்திரனையும் பார்க்கிறான். அதனாலேயாதான் தான் அறிந்தது சரி என்று தலலைகீழாக நின்று வாதாடுகிறான்.
பூமி என்பது ஒரு மிகப் பெரிய பந்து. அந்த பந்தின் மேற்புறத்தில்தான் கட்டிடங்கள், விலங்குகள், மரம் செடி கொடிகள் மற்றும் நாமும் நிலைத்திருக்கிறோம்.
கற்பனையில், ஒரு முழுஆரஞ்சு பழத்தின் மேல் தோலின் அனைத்து பகுதிகளிலும் அதாவது மேல்பகுதி, கீழ்பகுதி, பக்கவாட்டு பகுதிகளில் குண்டூசிகளை சொருகிவைத்து அவைகளுக்கிடையில் எறும்புகளை ஊரவிட்டால் என்ன நடக்கும்?
தோலின் மீது சொருகப்பட்ட குண்டூசிகள்தான் கட்டிடங்கள், மரங்கள். அவைகளுக்கிடையில் ஊர்ந்து செல்லும் எறும்புகள்தான் நாம் மற்றும் விலங்குகள். முழு ஆரஞ்சுப்பழத்தின் மீது ஊர்ந்து சென்ற எறும்புகள் பழத்தை சுற்றி சுற்றி வந்து எப்படி கீழே விழவில்லையோ அதே போலதான் நாமும் கீழே விழுவதில்லை. (புவிஈர்ப்பு விசையை பிறகு பார்ப்போம்).
ஆக பூமி "பந்து" போன்ற வடிவம் உள்ளது. பந்தின் மேல்பகுதி, கீழ்பகுதி, பக்கவாட்டுப் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் மனிதன் கீழே விழாமல் நிலைத்திருக்க முடியும்.
குர்ஆன் :
உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்வதாக பூமியை ஆக்கவில்லையா?(77:26)
பூமி நம்மை கீழே விழவிடாமல் பிடித்துக்கொள்வதாக அதாவது தாய் தன் பிள்ளைகளை அணைத்துக் கொள்வதுபோல் அணைத்துக் கொள்வதாக அல்லாஹ் கூறுகிறான்.
பூமி உருண்டை என்பதை அறிய கடற்கரைக்குச் சென்றால் போதும். கரையிலிருந்து நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தெரியும் கடல் பகுதியின் தொலைவு எவ்வளவு தெரியுமா?
100 கி. மீ?
50 கி. மீ?
இல்லை வெறும் 5 அல்லது 6 கிலோமீட்டர்தான். எவ்வளவு சக்திவாய்ந்த பைனாகுலர் வைத்து பார்த்தாலும் அதை தாண்டி பார்க்க முடியாது. காரணம் அதன் தொலைவு அல்ல. பூமி உருண்டையாக இருப்பதால் ஏற்படும் வளைவுதான் காரணம்.
பூமியின் ஒவ்வொரு 8 கிலோமீட்டருக்கும் 5 மீட்டர் வளைவு இருக்கும். அந்த வளைவின் காரணமாகவே அதன் பின் பகுதிகள் பார்க்க முடியாததாகிறது. கடலின் அடிவானத்திலிருந்து நான்கு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்திரனை பார்க்க முடிந்த நம்மால் பூமியின் சில ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவை பார்க்க முடியாது. காரணம் பூமிப்பந்தின் வளைவு.
முப்பது அடி உயரம் உள்ள கப்பலில் நடுக்கடலில் பயணம் செய்யும்போது நம்மால் பார்க்க முடிந்த தொலைவு அதிகபட்சம் இருபது கிலோ மீட்டர்தான். பூமி தட்டையாக இருந்தால் நடுக்கடலில் இருந்து சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் பூமியின் பல ஆயிரம் கிலோமீட்டரை தடையின்றி பார்க்க முடியும்.
குர்ஆன் :
உங்களுக்கு அல்லாஹ் தனது சான்றுகளைக் காட்டுவதற்காக அவனது அருளால் கடலில் கப்பல்கள் செல்வதை நீர் அறியவில்லையா? (31:31)
மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் சான்றுகள்(2:164)
கப்பல் பிரயாணத்தில் சான்றுகள் உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இன்று வரை "பூமி" பந்து போன்ற ஒரு உருண்டை என்று நிரூபிக்க கடல் பிரயாணமே உதாரணமாக காட்டப்படுகிறது.
D:\Articles\~பிறை மீரான்\பூமியை அறிவோம்\photo600940399899552724.jpg

இது கடலின் ஒரு கரையில் இருந்து எடுக்கப்பட்ட படம். மறு கரையில் இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தின் மேல் பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. கீழ்ப்பகுதி பூமியின் வளைவு காரணமாக பார்க்க இயலவில்லை. பூமியின் வளைவு கீழ்பகுதியை மறைத்துவிடுகிறது
பூமியின் வளைவு நமது பார்வையை எப்படிக் கட்டுப்படுதிகிறது என்பதை இப்படம் விளக்குகிறது. தூரத்தில் இருக்கும் கப்பலில் இருந்து பார்க்கும்போது பூமியின் வளைவுக்கு மேலிருக்கும் கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. பூமியின் வளைவு கலங்கரை விளக்கத்தின் கீழ்பகுதியை மறைத்துவிடுகிறது
இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்
பிறை மீரான்
பூமியை அறிவோம். . . (part - 2)
பூமி என்பது பந்து போன்ற உருண்டை வடிவம் ஆனது என்றும் பூமியின் வெளிப்புறத்தில்தான் நாம் வசிக்கிறோம் என்றும் பார்த்தோம்.
பூமிப்பந்தின் வெளிப்புறத்தில் இருக்கும் நாம் பூமியின் மேல்பகுதி, கீழ்பகுதி, பக்கவாட்டுப் பகுதிகள் என அனைத்துப்பகுதிகளிலும் இருக்கிறோம். பூமிப்பந்தின் வெளிப்புறத்தின் மேல்பகுதியில் இருக்கும் மனிதர்கள் கீழே சரிந்து விழாமல் இருப்பார்கள் என்பதை அறிந்த மனிதர்கள், பூமிப்பந்தின் கீழ்பகுயிலும், பக்கவாட்டுப் பகுதிகளிலும் மனிதர்கள் இருந்தால் சரிந்து விழாமல் இருக்க முடியாது என என்னுவதால் பூமி உருண்டை என்பதை ஏற்க மனிதர்கள் தயங்குகிறார்கள்.
சரி, எப்படித்தான் பூமிபந்தின் கீழ்பகுதியிலும், பக்கவாட்டுப் பகுதிகளிலும் இருக்கும் மனிதர்கள் சரிந்து விழாமல் நிலைத்து இருக்கிறார்கள்?
இதற்கான பதில் நாம் சிறு வயதில் வகுப்பறையில் அரைத்தூக்கத்தில் கேட்டோமே அந்த "புவி ஈர்ப்பு விசை"தான்.
புவி ஈர்ப்பு விசை என்றால் என்ன?
(நமக்கு நன்றாக தெரிந்த இரும்பை ஈர்க்கும் "காந்தத்தை" உதாரணமாக கொண்டு 'புவி ஈர்ப்பு விசை"யை விளக்குகிறேன்)
ஒரு காந்தப் பந்தை கையில் எடுங்கள். சில ஆணிகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ஆணியின் குண்டுப்பகுதியை காந்தப் பந்தில் ஒட்டுங்கள். இப்படியே காந்தம் முழுவதும் ஒட்டி வையுங்கள். காந்தப் பந்து எப்படி எல்லா பக்கத்திலும் ஆணியை இழுத்து வைத்துக்கொள்கிறதோ அதுபோலவே பூமியும் தன் ஈர்ப்புவிசையால் எல்லா பக்கங்களிலும் எல்லாவற்றையும் ஈர்த்து வைத்துக்கொள்கிறது.
எப்படி இந்த காந்த பந்தை சுற்றி ஆணிகள் ஒட்டி இருக்கின்றவோ அதே போல உருண்டையான பூமியின் எல்லா பகுதிகலிலும் மனிதர்கள் ஈர்க்கப்பட்டு நிற்கின்றனர். நாம் மேல்பகுதியில் இருக்கிறோம் என்று வைத்துகொண்டால் நமக்கு மறுபகுதியில் இருப்பவர் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பதைப் போல இருக்கும். அவரைப் பொறுத்தவரை நாம் தலைகீழாக நிற்பதைப் போல இருக்கும். இதே போல தான் பக்கவாட்டில் இருப்பவர்களும்.
D:\Articles\~பிறை மீரான்\பூமியை அறிவோம்\பூமியை அறிவோம்-1.jpg
இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்
பிறை மீரான்
ஒரு சின்ன ஃபிளாஸ் பேக்.
பூமி படைக்கப்படவில்லை. சூரியன் ஒரு நெருப்பு பந்தாக மிதந்து கொண்டிருக்கிறது. சூரியனில் சிறு வெடிப்பு ஏற்பட்டு அதிலிருந்து ஒரு பந்து போன்ற காந்த உருண்டை வெளியானது. அந்த "காந்த பந்து" கடுமையான காந்த தன்மை கொண்டிருந்தது. சூரியனிலிருந்து வெளியேறிய "காந்த பந்து" 15 கோடி கிலோமீட்டர் தூரம் விலகியபின் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் அந்த "காந்த பந்து" சூரியனை வட்டமடிக்கத் தொடங்கியது.
அந்த காந்த பந்து சக்திவாய்ந்த காந்தம் என்றேனே, அதன் காந்த சக்திக்கு உதாரணம் :
அந்த காந்த பந்தின் மீது நாம் நின்றால் அதன் கடுமையைன காந்த சக்தியின் காரணமாக நம் உடல் சுருங்கி சிறு கடுகு போலாகிவிடும். அவ்வளவு காந்த தன்மை கொண்டது அந்த காந்த பந்து.
சூரியனை சுற்றிக் கொண்டிருந்த அந்த காந்த பந்து அதன் சுற்றுப்பாதையில் இருந்த பொருட்களை சிறிது சிறிதாக "ஈர்க்க"த் தொடங்கியது. அந்த காந்த பந்தின் அனைத்து பகுதிகளிலும் பொருட்கள் ஈர்க்கப்பட்டன. பொருட்கள் சூழ்ந்த காந்த பந்தின் காந்த தன்மை சிறிதளவு குறைக்கப்ட்டது. இது ஒரு நிலை.
பின்னர் நட்சத்திரங்களிலுருந்து பெய்த "இரும்பு மழை"யை ஈர்த்த அந்த காந்த பந்தின் வெளிப்புறம் முழுவதும் இரும்பால் சூழப்பட்டது. "காந்த பந்து" இப்போது "இரும்பு பந்து" போலானது. இரும்பு பந்தின் வெளிப்புறத்தில் காந்த தன்மை இன்னும் சற்று குறைந்தது.
அந்த "இரும்பு பந்து"ம் பொருட்களை ஈர்க்கத் தொடங்கியது. பொருட்கள் இரும்பு பந்தின் அனைத்துப் பகுதிகளிலும் இணைந்து இரும்பு பந்தை பெரிதாக்கின. அதாவது இரும்பு பந்தை விரிவாக்கின.
இப்போது இரும்பு பந்தின் மீது மேலும் பல பொருட்கள் சூழ்ந்து இணைந்ததால் காந்த தன்மை மேலும் குறைக்கப்பட்டு முன்பை விட பெரிய பந்தாக மாறியது.
இந்த நிகழ்வுகள் எல்லாம் அந்த காந்த பந்து சூரியனை சூற்றிக் கொண்டிருக்கும் போதே குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தது.
பின்னர், இறுதியாக அந்த பெரிய பந்து பெரும் விண்கற்களை ஈர்த்து பெரிய பந்தின் அனைத்துப் பகுதிகளிலும் இணைத்து தரை அமைத்தது.
இந்த விரிவாக்கத்தை குர்ஆன் கூறுகிறது. . .
"அவனே பூமியை விரித்தான்"
(13:3). . (15:19). . (50:7). .( 51:48). . (79:30). . (88:20). . (91:6)
சூரியனிலிருந்து வெளியேறிய அந்த காந்த பந்து வளர்ந்து விரிவடைந்து "பூமி"யாக மாறியது. இவ்வாறாக விரிவடைந்த செயல் பல ஆண்டுகள் நடந்ததாக விஞ்ஞானம் கூறுகிறது.
குர்ஆனிலோ இரண்டு நாட்களில் பூமி தயாரானதாக கூறப்படுகிறது.
"பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?"(41:9)
பூமியானது இரண்டு நாட்களில் தயாரானதாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்விடம் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமம். ஆக இரண்டு நாட்கள் என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்குச் சமமான ஆண்டுகளில் பூமி தயாரானதாக அல்லாஹ் கூறுகிறான்.
"உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது"(22:47)
பூமியின் வெளிப்புறத்தில் காந்த தன்மை மட்டுப்படுத்தப்பட்டு மனிதர்கள் சரிந்து விழாமலும், நடமாடவும் தடங்கல் இல்லாத அளவிற்கு சரிசெய்யப்பட்டதே அதற்குப் பெயர்தான் "புவி ஈர்ப்பு விசை".
பூமியின் வெளிப்புறத்தில் நம்மை அணைத்துக் கொண்டிருக்கும் "புவி ஈர்ப்பு விசை"யின் சக்தி பூமிப்பந்தின் மையத்தில் இருக்கும் சிறிய "காந்தப் பந்தி"லிருந்து கிடைப்பதே. பூமியின் வெளிப்புறத்தில் இருக்கும் நாம் இணைக்கப்பட்டிருப்பது பூமிப்பந்தின் மையத்தில் இருக்கும் அந்த காந்த பந்துடன்தான். அதனால்தான் சரிந்துவிடாமல் இருக்கிறோம்.
(பார்க்க படம் 2)
(நமக்கு நன்றாக தெரிந்த இரும்பை ஈர்க்கும் "காந்தத்தை" உதாரணமாக கொண்டு 'புவி ஈர்ப்பு விசை"யை விளக்குகிறேன். )

பூமியை அறிவோம். . . (part - 3)
"புவி ஈர்ப்பு சக்தி"யின் காரணமாக பூமிப்பந்தின் வெளிப்புறத்தின் மேல்பகுதி, கீழ்பகுதி மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் சரிந்து விழாமல் மனிதர்கள் நிலைத்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்த பலராலும் அந்த மனிதர்கள் காணக்கூடிய காட்சியை விளங்க முடியாததால் இந்த பதிவு.
கற்பனையில் பூமிப்பந்தை சிறியதாக்கி ஒரு அறைக்குள் (Room) கொண்டு சென்று அறையின் மையப்பகுதியில் மிதக்க விடுவோம்.
பந்தின் வெளிப்புறத்தில் மனிதர்களை நிறுத்தி காட்சிகளை பார்ப்போம்.
மேல் பகுதி - நபர் A
கீழ் பகுதி - நபர் B
பக்கவாட்டுப் பகுதி வலது - நபர் C
பக்கவாட்டுப் பகுதி இடது - நபர் D
பந்தின் மேல் பகுதியில் ஆணி அடித்தார்ப் போல் A என்ற நபர் நிற்கிறார். (வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு A யின் பாதங்கள் பந்தின் மீதும் மேலும் A நேராக நிற்பது போலவும் தோன்றும்) பந்தின் மேல் பகுதியில் நிற்கும் A தலையை உயர்த்தி பார்த்தால் அறையின் மேல்பகுதி (Ceiling) மட்டுமே தெரியும்.
பந்தின் கீழ்ப் பகுதியில் ஆணி அடித்தார்ப் போல் B என்ற நபர் நிற்கிறார். (வெளியில் இருந்து பார்ப்பவர்க்கு B யின் பாதங்கள் பந்தின் மீதும் மேலும் B தலை கீழாக நிற்பது போலவும் தோன்றும்) (பந்தில் தலை கீழாக தொங்கும் B தன்னை நேராக நிற்பதாக மட்டுமே அறிவார்) B தலையை உயர்த்திப் பார்த்தால் அறையின் தரை (Floor) மட்டுமே தெரியும்.
பந்தின் வலது பக்கவாட்டில் ஆணி அடித்தார்ப் போல் C என்ற ஒருவர் நிற்கிறார். (வெளியில் இருந்து பார்ப்பவருக்கு C யின் பாதங்கள் பந்தின் மீதும் மேலும் C காற்றில் படுத்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றும்) C தலையை உயர்த்தி பார்த்தால் அறையின் வலது பக்க சுவரும்(Wall), அறையின் மேல் பகுதியில் பாதியும், அறையின் தரை பகுதியில் பாதியும் தெரியும்.
பந்தின் இடது பக்கவாட்டில் ஆணி அடித்தார்ப் போல் D என்ற ஒருவர் நிற்கிறார். (வெளியில் இருந்து பார்ப்பவருக்கு D யின் பாதங்கள் பந்தின் மீதும் மேலும் D காற்றில் படுத்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றும். ) D தலையை உயர்த்தி பார்த்தால் அறையின் இடது பக்க சுவரும்(Wall), அறையின் மேல் பகுதியில் பாதியும், அறையின் தரைப்பகுதியில் பாதியும் தெரியும்.
ஆக, பக்கவாட்டில் இருப்பவர்களால் மேல் மற்றும் கீழ் பகுதிகளையும் பார்க்க முடியும்.
இப்போது பந்தை பம்பரம் சுழல்வது போல் சுழற்றுவோம். பந்து சுழல்கிறது.
பந்து சுழன்றாலும் பந்தின் மேலிருக்கும் நபர் A மற்றும் பந்தின் கீழிருக்கும் நபர் B ஆகிய இருவரும் அங்கேயே இருப்பது போல நிற்கிறார்கள்.
பந்தின் வலது புறம் இருந்து வலது பக்க சுவற்றை பார்த்துக் கொண்டிருந்த நபர் C யானவரை இடது பக்க சுவற்றை நோக்கி பந்து திருப்பியது.
பந்தின் இடது புறம் இருந்து இடது பக்க சுவற்றை பார்த்துக் கொண்டிருந்த நபர் D யானவரை வலது பக்க சுவற்றை நோக்கி பந்து திருப்பியது.
இப்போது பந்து சுழல்வதால், பந்தின் பக்கவாட்டில் இருப்பவர்களால் அறையின் அனைத்து சுவர்களையும், அறையின் மேல் பகுதியையும், கீழ் பகுதியையும் பார்க்க முடியும்.
இப்படித்தான் பூமிப்பந்தின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருக்கும் நம்மால், வானத்தின் பெரும்பாலான பகுதிகளை பார்க்க முடிகிறது.
நான்கு மூலை கொண்ட அறையை, இப்போது உருண்டையான பந்து போல மாற்றுவோம். மிகப் பெரிய பந்தின் மையத்தில் பூமிப்பந்து மிதக்கிறது.
சரி, பூமிப்பந்தின் மீது நபர் A வை மேல்பகுதியில் நிறுத்த வேண்டும். இப்போது பூமிப்பந்தின் மேல் பகுதியை எப்படி அறிவது?
சதுரமான அறைக்கு உள்ளே பூமிப்பந்தை மிதக்க விட்டால்தான் பூமிப்பந்திற்கு மேல், கீழ், பக்கவாட்டு பகுதி என பகுதிகள் கிடைக்கும். உருண்டையான ஒரு பகுதியில் பூமிப்பந்தை மிதக்க விட்டால் பூமிப்பந்திற்கு மேல், கீழ், பக்கவாட்டுப் பகுதிகள் என எதுவும் கிடையாது.
வானம் என்பது பூமியைப் பொருத்தவரை அதன் வெளிப்புறத்தில் தெரியும் காட்சி. அவ்வளவே.
இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.
பிறை மீரான். . .

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி