Skip to main content

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில், 

இல்லுமினாட்டி இல்லை!
இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!!
இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!!

என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன். 

முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன். 

இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பும் ஒரு அப்பாவியே. 

இல்லுமினாட்டியைப் பொறுத்தவரைக்கும் இவர் படிக்க வேண்டியது நிறைய இருந்தாலும், எதற்காக இவர் இல்லுமினாட்டியை குர்ஆனில் இருந்து நிரூபிக்க முயல்கிறார் என்பதை அறிய முடிசெய்து, இவருடைய யுடியூப் சேனல் (Youtube channel) வீடியோக்களை பார்வையிட்டேன். 

சூப்பர் முஸ்லிம் (Super Muslim) என்ற அந்த வீடியோ சேனல் முழுவதும் அவருடைய பேச்சுக்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

இவர் தன்னை எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் இல்லை என்று கூறுகிறார். ஆனால், தமிழகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் அச்சாரமாக இருக்கும் "அந்நஜாத்" இதழின் ஜமாத்துல் முஸ்லிமீன் எனும் அமைப்பில் இருந்தவர். அந்த அமைப்பின் அமீர் அபுஅப்துல்லாஹ் அவர்களின் மரணத்திற்குப் பிறகு புது அமீர் தேர்ந்தெடுக்கப்பட்டபின் அந்த அமைப்பில் பயணிப்பதை தவிர்த்துக்கொண்டவர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த சூப்பர் முஸ்லிம் யூடியூப் சேனலை தொடங்கியிருக்கிறார். 

இவர் பேசுவது தன்னுடைய சுய கருத்துக்கள் இல்லையென்றும், அல்லாமா இக்பால், மௌலானா மௌதூதி, இஸ்ரார் அஹ்மது மற்றும் இம்ரான் நாஸர் ஹுஸைன் போன்றவர்களின் உருது மொழி புத்தகங்களை படித்துவிட்டு அதைப் பற்றி மட்டும் பேசுவதற்காகத்தான் அந்த சேனலை ஆரம்பத்திருப்பதாக கூறுகிறார். 

ஆனால், நடிகர் விஜய் மற்றும் NRC போன்ற விஷயங்களைப்பேசி தன்னையும் சமகால இஸ்லாமியப் பிரமுகராக காட்ட முனைகிறார். 

இவருடைய கருத்துக்கள் இவருடைய சொந்த கருத்து இல்லை என்றாகிவிட்ட நிலையில்...

யஃஜூஜ் மஃஜூஜ், தஜ்ஜால், மஹ்தி மற்றும் மேஸியா என்ற மறுமை அடையாளங்களைப் பற்றின நம்பிக்கைகளை, தற்காலத்திற்கு மாற்றியமைத்து, ஜெருஸலம் எனும் புனித பூமியைச் சுற்றி அவற்றை திரைக்கதையாக அமைத்து அதை மிகப்பெரிய திரைப்படமாக மாற்றி வெற்றிபெறச் செய்திருக்கும் இம்ரான் நாஸர் ஹூஸைன் என்பவரின் திரைப்படத்தைதான் நாம் பார்த்து விமர்சிக்க வேண்டுமே தவிர, தமிழ் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் சூப்பர் முஸ்லிம் சேனலை நாம் விமர்சிக்க ஒன்றுமில்லை. 

சூப்பர் முஸ்லிம் சேனலின் ஒரிஜினல் பதிப்பான இம்ரான் ஹுஸைன் என்பவரின் கருத்துக்களே ஆராயப்பட வேண்டும். 

"என்னுடைய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையென்றால் நான் சொல்வதுதான் சரியானது" என்று ஒருவர் கூறினால் அது எத்தகைய ஆபத்தை விளைவிக்குமோ அத்தகைய ஆபத்தை விளைவித்ததிருப்பவர்தான் இம்ரான் ஹுஸைன். 

ஜெருஸலம் என்ற பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று யஃஜூஜ் மஃஜூஜ் என்ற பெயர்களைக் கொண்டு படத்தை தொடங்குகிறார் இம்ரான் ஹுஸைன். இந்த காட்சியை பார்க்க ஆரம்பித்தவர்கள் தங்களை அறியாமலேயே அந்த படத்தில் மூழ்க ஆரம்பத்துவிடுவர். நாமும் அதில் மூழ்கிவிட்டால் பிறகு நாமும் ஒரு சேனல் ஆரம்பித்து இம்ரான் ஹுஸைனின் கருத்துக்களை பரப்ப ஆரம்பித்துவிடுவோம். அந்த அளவிற்கு திரைப்படத்தை கச்சிதமாக கொண்டு செல்கிறார் இம்ரான் ஹுஸைன். 

அந்த படத்தின் டீஸரை மட்டும் முதலில் பார்ப்போம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


Part -2

https://piraimeeran.blogspot.com/2020/07/SM2.html?m=1

Popular posts from this blog

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி