Skip to main content

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -6)

பெண்களின் சம்மதம் இல்லாமல் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று சட்டமியற்றிய நபி(ஸல்) அவர்கள் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்ததாக சொல்லப்படுவது முரண்பாடாகத்தான் தெரிகிறது. 

ஆனால் அது முரண்பாடு அல்ல. 

மதுவை தடை செய்த நபி(ஸல்) அவர்கள் பத்ரு போர்க்களத்தில் நபித்தோழர்களுள் சிலர் மது அருந்தியிருந்ததை தடுக்கவில்லை என்பது முரண்பாடாக இருக்கிறது என்று எவரும் கூறுவார்களா? 

கூறமாட்டார்கள். ஏனென்றால் மது தொடர்பான சட்டம் இறங்குவதற்கு முன்பு மது அருந்தியது குற்றமாக பார்க்கப்படாது. 

இதுபோலவே, பெண்களின் திருமண வயது, பெண்களின் சம்மதம், மணக்கொடை(மஹர்) போன்றவை குறித்து சட்டம் இறங்கியிருக்காத நிலையில், அந்த காலகட்டங்களில் நடந்து முடிந்த திருமணங்களில் மேற்கண்டவைகள் குறித்து கேள்வி எழுப்புவது அறிவுடையோர் செய்யும் வேலை அல்ல. 

அதுபோன்ற ஒரு அறிவற்ற விமர்சனம்தான் 1905 ஆம் ஆண்டு இங்கிலாந்து எழுத்தாளரால் எழுப்பப்பட்டது. 

அத்துனை ஆண்டுகளாக சிறுமியாகத் தெரியாத அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் திடீரென சிறுமியாக மாற்றப்பட்டது ஏன்? 

இதற்குப் பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். 

பிரிட்டிஷ் இந்தியாவில் 1884 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் "மலபாரி" (Behramji Malabari) என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். 

Book's name: "Infant Marriage and Enforced Widowhood in India"

குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டு அதில் கனவன் இறந்துவிட்டால் அந்த பெண்குழந்தை விதவையாகவே வாழ்நாளை கழிக்கும் அவல நிலையை இந்த புத்தகத்தில் விளக்கியிருந்தார் மலபாரி. குழந்தைத் திருமணத்தின் அவலத்தை இது விளக்கியது.

அதன் தொடர்ச்சியாக, ஒரு சம்பவம் நடந்தது. ருக்மாபாய் (Rukhmabai) என்பவருக்கு அவருடைய பதினோராவது வயதில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஆறுமாதம் கடந்த பிறகு அவர் பூப்பெய்தினார்(puberty). 

அதாவது, பருவமடைவதற்கு முன்பாகவே திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அந்த பெண் பருவமடைகிறார். 

இதன் தொடர்ச்சியாக சாந்தி முகூர்த்தம்(முதலிரவு) என்ற மத சடங்கிற்கு நாள் குறிக்கும்போது அதை அந்த பெண்ணின் வளர்ப்புத் தந்தை எதிர்க்கிறார். அவர் ஒரு மருத்துவர் என்பதால் உடலுறவுக்கு ஏற்ற காலகட்டம் அது அல்ல என்று தடுத்தார். 

இதன் காரணமாக ஏமாற்றமடைந்த அந்த பெண்ணின் கனவர் தரப்பில் இருந்து சட்டரீதியான தாக்குதல் நடந்தது. தனது மனைவியை தன்னுடன் அனுப்ப மறுக்கிறார் என்று வளர்ப்பு தந்தை மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கனவருடன் தனக்கே வாழவிருப்பமில்லை என்று ருக்மாபாய் பதில் அளிக்கிறார். மத நடைமுறைகளின்படி அப்படி மறுக்க முடியாது என்று சொல்லப்பட்டது. 

ருக்மாபாய் குழந்தையாக இருந்தபோது எவ்விதமுடிவும் எடுக்கமுடியாத நிலையில் (helpless infancy) அவருக்கு நடந்த திருமணத்தை ஏற்க முடியாது என்று முடிவு அறிவித்தார் நீதிபதி. 

இது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்து மதத்தின் ஆண்மீக சட்டதிட்டங்களை தெரிந்து கொள்ளாமல் நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார் என்று விமர்சிக்கப்பட்டது. இந்து மத தீவிர ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பை அது உண்டாக்கியது. 

1886 ஆம் ஆண்டு அந்த வழக்கு மறுவிசாரனைக்கு வந்தது. இந்து மதத்தின் விதிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு 1887 ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது. 

"ருக்மாபாய் தனது கனவருடன் செல்ல வேண்டும், அல்லது ஆறுமாதம் சிறை தண்டனை அடைய வேண்டும்" என்ற அதிர்ச்சிகரமான தீர்ப்பு வந்தது. 

இதைத் தொடர்ந்து மலபாரி அவர்களின் உதவியுடன் விக்டோரியா மகாராணிக்கு கடிதம் எழுதினார் ருக்மாபாய். 

பெண்ணின் திருமண வயதை 15 ஆக அதிகரித்து சட்டம் இயற்றி தன்னைப் போன்ற பெண்களின் எதிர்காலத்தை காப்பாற்றுமாறு மஹாராணியிடம் முறையிட்டார் ருக்மாபாய். (பின்னாளில் இவர்தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக ஆனார்) 

ருக்மாபாய் அல்லாமல் இன்னொரு சம்பவமும் நடந்தது. ஃபுல்மோனி தாஷி (Phulmoni Dasi) எனும் பத்து வயது பெங்காளி சிறுமிக்கு திருமணம் நடைபெற்று, அவரின் கனவர் அவருடன் உடலுறவில் ஈடுபட்டபோது அந்த பெண் இறந்துவிடுகிறார். அந்த பெண்ணின் தாயார் இதை கற்பழிப்பு சம்பவமாக புகார் செய்கிறார். 

IPC செக்ஷன் 338 ன்படி இறந்த பெண்ணின் கனவர் தண்டிக்கப்படவேண்டும் என்ற தீர்ப்பு வந்தது. ஒருவர் தனது சொந்த மனைவியுடன் உடலுறவுகொள்ளும்போது ஏற்படும் விபத்துக்களை பிறருக்கு ஊறுவிளைவிப்பதாக கருதக்கூடாது என்று எதிர்க்கப்பட்டது. 

மேற்கண்ட இந்த இரண்டு வழக்குகளும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. மலபாரி அவர்கள் இவற்றை பெரிய பிரச்சினையாக ஆக்கினார். இதன்விளைவாக பெண்களுடன் உடலுறவு கொள்ளும் வயதை மாற்றியமைத்து சட்டம் இயற்றியது பிரிட்டிஷ் அரசாங்கம். 

அதுவரையிலும், பத்துவயது பெண்களிடம் உடலுறவு கொள்வதை அனுமதித்த சட்டம் மாற்றப்பட்டது.  1860 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டிருந்த அந்த சட்டம் பத்துவயது பெண்களிடம் உடலுறவு கொள்வதை சட்டபூர்வமாக அனுமதித்திருந்தது. அந்த சட்டம் மாற்றப்பட்டு பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களுடன்தான் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று 1891 ஆம் ஆண்டில் அச்சட்டம்  திருத்தப்பட்டது. 
இதுதான் "Age of Consent Act -1891" என அழைக்கப்படுகிறது. 

ஆனால் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, பத்துவயது பெண்களிடம் உடலுறவுகொள்ளக் கூடாது என்ற சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

'பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது உங்கள் அரசு. பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’ என்று கேள்வியெழுப்பினர் இந்துமத ஆதரவாளர்கள். 

பாலகங்காதர திலகர் என்பவர் மலபாரியை சாடினார். பார்சி மதத்தைச் சார்ந்த மலபாரி இந்து மதத்தின் சட்டங்கள் தெரியாமல் விளையாடுகிறார் என்று விமர்சித்தார். 

ஆனால், சுவாமி விவேகானந்தர் பழைய சட்டத்தை எதிர்த்து இந்த புதிய சட்டத்தை ஆதரித்தார். 

** பெண்களுக்கு 9 வயதிலேயே திருமணம் செய்கின்ற வெட்கக்கேட்டை நிறுத்த வேண்டும்

** 10 வயது பெண்ணிற்கு, தொப்பை பெருத்த, வயதான ஒரு கணவனைப் பார்த்து, பெற்றோரே அவனது கையில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள். என்ன பயங்கரம்!.. 

** எட்டு வயது சிறுமி முப்பது வயதான ஒருவனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்; 8 வயது சிறுமியைத் தாயாக்கி, அதற்கு விஞ்ஞான விளக்கமும் கூற முற்படுவோரிடம் என்ன மதத்தை எதிர்பார்க்க முடியும்? 

** இளமை மணம் என்ற இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை என் வலிமை கொண்டமட்டில் நான் நசுக்கிஒழிப்பேன்; குழந்தைகளுக்கு கணவனைத் தேடித் தருவதாகிய இத்தகைய செயல்களில் நான் எவ்வித பங்கும் கொள்ள முடியாது, நிச்சயமாக முடியாது. 

என்று கடுமையாக சாடி அந்த புதிய சட்டத்தை விவேகானந்தர் ஆதரித்தார். எனினும் பெரும்பாலான இந்துக்களின் எதிர்ப்பால் அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

வயதுக்குவராத சின்னப்பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவது நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட நடைமுறையில் இருந்திருக்கிறது,  அது கேவலமாக பார்க்கப்படவில்லை என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும்.

அமெரிக்காவின் முப்பது மாகாணங்களில், பெண்களுடன் உடலுறவு கொள்ளும் வயது வெறும் பத்து வயதாகத்தான் 1880 ஆம் ஆண்டில் இருந்தது. அதிலும் டெல்வேர்(Delaware) எனும் மாகாணத்தில் ஏழு வயது பெண்ணுடன் உடலுறவு கொள்வதை குற்றமாக கருதக்கூடாது என்ற சட்டமும் இருந்தது. 

பன்னிரண்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்த "Canon law" எனும் சட்டவடிவங்களை இயற்றுவதில் முக்கிய பங்காற்றிய கிரேட்டைன்(Gratain) என்பவர் 12 வயதில் பெண்களுக்கு திருமணம் நடப்பதை சட்டமாக்கினார். ஆனால், ஏழு வயதிற்கு மேற்பட்ட பெண்ணிற்கு திருமணம் நடந்தால் அதையும் ஏற்றுக்கொள்ளலாம் என்றார். இன்னும் சிலரோ ஏழு வயதிற்குள்ளாக பெண்ணிற்கு திருமணம் நடந்தாலும் ஏற்கலாம் என்ற கொள்கையை கொண்டிருந்தனர். 

ரைட். விஷயத்துக்கு வருவோம்...

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பருவ வயதை அடையாத பெண்களுக்கு திருமணம் நடப்பது குற்றமாகக் கருதப்படவில்லை. அது கேவலமாகவும் கருதப்படவில்லை. 

அவ்வாறு, பருவ வயதை அடையாத பெண்ணிற்கு திருமணம் நடந்து, அந்த பெண் பருவத்தை அடைந்த பிறகு அப்பெண்ணுடன் அவளின் கணவன் இல்லறத்தில் ஈடுபடுவது சமுதாயத்தில் கேவலமாக பார்க்கப்படவில்லை. 

ஆனால், மேற்கண்ட அனைத்தும் இஸ்லாத்தில் கேவலமாகவும் குற்றமாகவும் பார்க்கப்பட்டது. 

பருவம் அடைந்த பெண்ணிற்குதான் திருமணம் செய்து வைக்கவேண்டும், அதுவும் அந்த பெண்ணின் சம்மதம் பெற்ற பிறகே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதில் இருந்து "பால்ய விவாகம்" இஸ்லாத்தில் இருந்து துடைத்து எறியப்பட்டுவிட்டது. 

1300 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாத்தில் கேவலமாக கருதப்பட்ட பால்ய விவாகம் வெறும் 100 வருடங்களுக்கு முன்புதான் நாகரீக உலகத்தால் கேவலமாக பார்க்கப்பட்டது. 

பல நூறு வருடங்களாக அந்த கேவலத்தை செய்து வந்த நாகரீக கோமாளிகள் தங்களுடைய கேவலத்தை மறைக்க அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் திருமண வயதை கையிலெடுத்தனர். ஆறுவயது சிறுமியை முஹம்மது திருமணம் செய்தார் என்று கேவலமாக சித்தரிக்க முயன்றனர். 

இதில் ஒரு கேவலமும் இல்லை. 

திருமணம் தொடர்பான சட்டம் முழுமைபெறுவதற்கு முன்பு நடந்த சம்பவத்தில் எந்த கேவலமுமில்லை. 

David Samuel என்பவர் 1905 ஆம் ஆண்டு வெளியிட்ட அந்த புத்தகத்தில் ஆறுவயது சிறுமியை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள் என்று கேவலமாக சித்தரிக்கப்பட்டிருந்ததை முஸ்லிம்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அப்படியே விட்டிருந்தால் அந்த பிரச்சாரம் காணாமலே போயிருக்கும். 

மிர்ஸா குலாமை நபியாக ஏற்றுக்கொண்ட முஹம்மது அலி எனும் ஒரு காதியானிதான் அந்த பிரச்சாரத்திற்கு எதிர்வினையாற்றினார். 
ஹதீஸ்களின் மதிப்பு தெரியாமல் அதில் விளையாடுவதில் வல்லவர்களான காதியானிகள் இதிலும் விளையாடினர். 

காதியானிகள் விளையாடியதையும் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இம்ரான் ஹுஸைன் உருட்டிய புது உருட்டையும் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


Part -7
https://piraimeeran.blogspot.com/2020/07/SM7.html?m=1


Part -5
https://piraimeeran.blogspot.com/2020/07/SM5.html?m=1

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி