Skip to main content

*ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -1)

 *ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -1)

ஸம்ஸம்! 

மக்காவில் காபா எனும் இறையில்லத்தின் அருகாமையில் அமையப்பெற்றிருக்கும் ஒரு கிணற்றின் பெயர்தான் ஸம்ஸம். அந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீரானது 'ஸம்ஸம் நீர்' என அழைக்கப்படுகிறது. 

ஸம்ஸம் கிணறு தோன்றிய விதம் அற்புதம் (Miracle) என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ஸம்ஸம் கிணறு மற்றும் ஸம்ஸம் நீர் ஆகிய இரண்டும் முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி அல்லாஹ்வின் அருள் நிறைந்தவை. இந்த நம்பிக்கைக்கு காரணம், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை உயர்வாக கூறியிருப்பதுதான். 

** ஸம்ஸம் நீர் பூமியிலேயே சிறந்த நீராகும்

** ஸம்ஸம் நீர் பரக்கத் நிறைந்ததாகும்

** ஸம்ஸம் நீர் பானமும் உணவுமாகும்

**ஸம்ஸம் நீர் நோய் நிவாரணியாகும்

** ஸம்ஸம் நீர் எதற்காக அருந்தப்படுகிறதோ அதற்கானதாகதாகும்

என்றெல்லாம் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி ஸம்ஸம் நீர் மதிப்புமிக்கது. அதனால்தான், ஸம்ஸம் நீர் முஸ்லிம்களிடையே மதிப்பு மிக்க ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்களிடம் இருக்கும் தங்கம் வெள்ளி போன்றவற்றை பாதுகாப்பதுபோல் அவர்களுக்கு கிடைக்கும் ஸம்ஸம் நீரையும் பாதுகாத்துவைத்து நீண்ட காலத்திற்கு அருந்துவது முஸ்லிம்களிடையே காலம்காலமாக இருந்து வருகிறது. 

ஸம்ஸம் கிணற்றில் இருந்து எவ்வளவு அள்ளினாலும் குறையாத வகையில் அதிசயமான முறையில் வந்து கொண்டிருக்கும் ஸம்ஸம் நீரானது கெட்டுப்போகாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. 

எந்த நீரையும் வருடக்கணக்கில் வைத்து எவரும் பருகுவதில்லை. ஆனால், ஸம்ஸம் நீரை மட்டும் பாதுகாத்து பல வருடங்கள் கடந்தும் முஸ்லிம்கள் பருகிவருகின்றனர். இதற்குக் காரணம் ஸம்ஸம் நீர் கெட்டுப்போகாத அற்புத நீர் என்று முஸ்லிம்கள் நம்புவதுதான்.

மதங்களின் நம்பிக்கைகள் அறிவியல் கொண்டு ஆட்டம்காண வைக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸம்ஸம் தொடர்பான நம்பிக்கைகளையும் அறிவியல் அசைத்துப் பார்த்தது. அப்போதிலிருந்து அறிவியல் மூலம் ஸம்ஸம் சோதனைகளை சந்திப்பதும் அதே அறிவியலைக் கொண்டு ஸம்ஸம் நம்பிக்கைகள் மேம்படுத்தப்படுவதும் ஆரம்பமாகியது. 

ஸம்ஸம் அற்புதமா? அறிவியலா? எனும் பட்டிமன்றம் தொடங்கியது. 

ஸம்ஸம் தொடர்பான தவறான நம்பிக்கைகளும் முஸ்லிம்களிடையே ஊன்றத் தொடங்கியது. 

இது தொடர்பாக விரிவாக பார்ப்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி