Skip to main content

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -3)

கியாமத் நாளின் அடையாளமாக கூறப்படும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வெளிவந்து விட்டார்கள் என்று நெருப்பை பற்ற வைத்தார் 
"சாரே ஜஹான்ஸே அச்சா" என்ற பாடலை எழுதிய கவிஞர் அல்லாமா இக்பால்.

கூடுதலாக, யன்சிலூன் (یَنْسِلُوْنْ) என்ற வார்த்தையின் விளக்கத்தையும் முஸ்லிம்கள் பார்க்கட்டும் என்று பொடி வைத்து கவிதை எழுதியிருந்தார்.

அவர் சொல்லும் யன்சிலூன் (یَنْسِلُوْنْ) என்ற வார்த்தை 21 வது அத்தியாயத்தின் 96 வது வசனமாக குர்ஆனில் இடம்பெற்றிருக்கிறது.
حَتَّىٰ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٍ *يَنسِلُونَ* (21:96)

"முடிவில் யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தினர்) திறந்து விடப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைவார்கள்." (21:96)

இந்த வசனத்தில் இடம்பெற்றிருக்கும் யன்சிலூன் (يَنسِلُونَ) என்ற வார்த்தையைத்தான் முஸ்லிம்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தார் கவிஞர் இக்பால்.

பார்த்தாச்சு.

அது, கியாமத்நாளின் அடையாளமாக யஃஜூஜ் மஃஜூஜ் வெளிவருவார்கள் என்ற செய்தியை சொல்கிறது.
ஆனால், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் திறந்துவிடப்பட்டுவிட்டனர் என்று சொல்கிறார் கவிஞர் இக்பால். அப்படியென்றால் கியாமத்நாள் வந்துவிட்டதா?

ஒரே குழப்பமா இருக்குதே!!!...

அந்த வசனத்திலிருந்து அல்லாமா இக்பால் அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்?

இக்பால் அவர்கள் எழுதிய மேற்கண்ட கவிதை ஒரு வரலாற்றுச் சம்பவத்துடன் முடிச்சு போடப்பட்டு அது அவரின் முன்னறிவிப்பாக சிலாகிக்கப்படுகிறது.
1917 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அது, Balfour Declaration என அழைக்கப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறுவதை அங்கீகரிப்பதாக இருந்தது அந்த அறிக்கை. பாலஸ்தீனம் யூதர்களின் Home land என்று வர்ணித்தது அந்த அறிக்கை.

அதன் பிறகு ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் யூதர்கள் பாலஸ்தீனத்தை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர்.
மேற்கத்திய நாடுகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள்
படையெடுக்க ஆரம்பித்தனர். (1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு அறிவிக்கப்பட்டது)

பாலஸ்தீனத்தை பிரித்து யூதர்களுக்கான தனிநாட்டை அங்கீகரிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அந்த அறிக்கையை புரிந்து கொண்டு முஸ்லிம்களை எச்சரித்தவர் கவிஞர் இக்பால் என்று  சொல்லப்பட்டது.

அதாவது, நாடற்றவர்களாக ஐரோப்பாவின் பலபகுதிகளிலும் குடியிருந்த யூதர்கள் அதிகாரத்தை அடைந்து தங்களின் மூதாதையார்களின் கனவு தேசத்திற்கு திரும்புவதைத்தான், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் திறந்துவிடப்பட்டுவிட்டனர் என்று சொல்கிறார் என்று சிலாகிக்கப்பட்டது.

பூமியின் உயரமான பகுதிகளில் இருந்து அவர்கள் விரைவார்கள் என்பதை, வானளாவிய அதிகாரத்தைதான் அது குறிக்கிறது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதிகாரத்தின் மூலம் ஒரு நாட்டை அடைந்து அதை நோக்கி யூதர்கள் விரைந்து செல்வதையே யன்சிலூன் என்ற வார்த்தை குறிக்கிறது என்று விளக்கமும் அளிக்கப்பட்டது. 

இது சரிதானா?

பொதுவாக கவிஞர்கள் கற்பனைகளை கலந்து விருந்துபடைப்பவர்கள். அவர்களின் கற்பனை கவிதைகள் சில சமயங்களில் நிகழ்வாகவும் மாறிவிடுகின்றன. அப்போது அவர்களின் கவிதைகள் முன்னறிவிப்பாக பார்க்கப்படுகின்றன.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 'ஆனந்த சுந்திரம் அடைந்து விட்டோம்' என்று பள்ளு பாடிய கவிஞர் பாரதியார் அதுபோன்று சிலாகிக்கப்பட்ட கவிஞர்தான் என்பது நமக்குத் தெரிந்த ஒரு உதாரணம்.

அது போன்று, கவிஞர் இக்பால் அவர்களின் அந்த கவிதை வரிகள் முன்னறிவிப்பாக பார்க்கப்படுகிறது. யஃஜூஜ் மஃஜூஜ் பற்றி சரியாக புரிந்து கொண்டவர் கவிஞர் இக்பால்தான் என்று சிலாகிக்கப்பட்டது.

யஃஜூஜ் மஃஜூஜ் என்பவர்கள் குள்ளமானவர்கள் மற்றும் விசித்திரமானவர்கள் என்று முஸ்லிம்கள் பொதுவாக நினைத்திருக்கும்போது, சமகாலத்தில் நம்மைப் போன்ற மனிதர்களாக வாழ்ந்து வரும் யூதர்கள்தான் அந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் என்று கவிஞர் இக்பால் அவர்களால் எவ்வாறு கற்பனை செய்ய முடிந்தது?

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரை சமகாலத்தில் வாழும் மனிதர்களாக நினைக்கும் இந்த கற்பனைக்குச் சொந்தக்காரர் கவிஞர் இக்பால் அல்ல. கவிஞரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மிர்ஸா குலாம் அஹ்மதுதான் அந்த கற்பனைக்குச் சொந்தக்காரர்.

வாக்களிக்கப்பட்ட மஹ்தியும் நான்தான் மஸீஹும்(ஈஸா) நான்தான் என்று வாதிட்டு தனி மதத்தை தோற்றுவித்த காதியானி மிர்ஸா குலாமின் கற்பனைதான் யஃஜூஜ் மஃஜூஜ் என்பவர்கள் சமகாலத்தில் வாழும் மனிதர்கள் என்ற கற்பனை.

இந்த கற்பனைக்கு இவருக்கு என்ன தேவையிருக்கிறது?
கியாமத்நாளின் அடையாளமாக இருக்கும் ஈஸா(அலை) தான்தான் என்றார் மிர்ஸா குலாம். 

அவர்தான் உண்மையான ஈஸா(அலை) என்றால் ஹதீஸ்களின்படி அவர்...

** சிலுவையை உடைக்க வேண்டும் ** பன்றியைக் கொல்ல வேண்டும்
** தஜ்ஜாலை அழிக்கவேண்டும்
** யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை ஒழிக்க வேண்டும்

இங்குதான் தன்னுடைய வார்த்தை ஜாலங்களை வெளிப்படுத்துகிறார் மிர்ஸா குலாம்.

¶¶ சிலுவையை உடைப்பதென்பது உலகத்தில் இருக்கும் சிலுவைகளை தேடிப்பிடித்து உடைப்பதல்ல என்றும்,
ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்ற உண்மையை உடைத்துக் கூறுவதையே அது குறிக்கும் என்றார்.

¶¶ பன்றியைக் கொல்வது என்பது உலகத்தில் உள்ள ஒவ்வொரு பன்றியாக பிடித்துக் கொல்லுவதல்ல என்றும், கேவலமான கலாச்சாரங்களை அழிப்பதையே அது குறிக்கும் என்றார்.

¶¶ தஜ்ஜால் என்பது மனிதன் அல்ல என்றும் அது கடவுளுக்கு எதிரானவைகளை குறிக்கும் என்றும் விளக்கம் கூறி அத்தகைய தஜ்ஜால்களை முஸ்லிம்களிடம் இல்லாமல் அழிப்பதே தன்னுடைய வேலை என்றும் விளக்கம் கொடுத்தார்.

¶¶ யஃஜூஜ் மஃஜூஜ் என்ற படைப்பைப் பற்றி முந்தைய வேதங்களும் கூறுகின்றன என்கிறார் மிர்ஸா.  நெருப்பை கையாள்வதில் அவர்கள் வல்லவர்கள் என்றும் தொடர்கிறார் மிர்ஸா.

"அஜிஜ்" என்ற மூலத்தில் பிறக்கும் நெருப்பை அவர்கள் கையாளுவதால் அவர்கள் யஃஜூஜ் மஃஜூஜ் என்று அழைக்கப்படுகின்றனர் என்றும் விவரிக்கிறார். இயந்திரம், இரயில், கப்பல் என நெருப்பை பயன்படுத்தியும், போர்களிலும் நெருப்பை பயன்படுத்தி ராக்கெட் விட்டு நெருப்பைக் கையாளுவதில்
வல்லவர்களான மேற்கத்தியர்கள்தான் அந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் என்று விளக்கம் கொடுத்தார் மிர்ஸா.

யஃஜூஜ் மஃஜூஜ்களான அந்த மேற்கத்தியர்களின் கலாச்சாரங்களை அழித்து முஸ்லிம்களை காப்பாற்றுவதே யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை அழிப்பதைக் குறிக்கும் என்று புதுவிளக்கத்தை கொடுத்தார் மிர்ஸா குலாம்.

இவ்வாறாக, மேற்கத்திய வெள்ளையர்கள்தான் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் என்று மிர்ஸா குலாம் கொடுத்த விளக்கம் அவரை ஈஸா(அலை) என்று நம்பிய மக்களுக்கு போதுமானதாக இருந்தது.

மிர்ஸா குலாம் மீது அன்பு கொண்டிருந்த கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களும் இந்த விளக்கத்தை நம்பியதன் வெளிப்பாடுதான் யூதர்களை யஃஜூஜ் மஃஜூஜ் என்று அவர் தனது கவிதையில் குறிப்பிடதற்கு காரணமே தவிர இந்த விளக்கத்தை அவர் சுயமாகக் கூறவில்லை.

அல்லாமா இக்பால் அவர்கள் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் காதியானி மதத்திற்கு எதிராக செயல்பட்டாரே தவிர அவருடைய பெரும்பாலான காலகட்டம் காதியானிகளுடன் உடன்பாடாகவே இருந்து வந்தது. அந்த கவிதைத் தொகுப்பு வெளிவந்த நேரத்தில் காதியானிகளுடன் அவர் உறவு கொண்டவராகவே இருந்தார்.
அதனால், மிர்ஸா குலாமின் தாக்கம் அவருடைய கவிதையில் வெளிப்பட்டதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

சூப்பர் முஸ்லிம் சேனலால் போற்றி புகழப்படும் இம்ரான் ஹுஸைன் அவர்கள் இந்த காலகட்டத்தில் பிறந்திருக்கவேயில்லை.
ஆனால், இந்த காலகட்டத்தில் இன்னொருவர் இருந்தார். அவர்தான் மௌலானா மௌதூதி என்று அழைக்கப்படும் ஜமாத்தே இஸ்லாமி எனும் அமைப்பை தொடங்கிய சையது அப்துல் அலா மௌதூதி.

இவர் ஒரு புதிய விஷயத்தை வெளியிட்டார். 

அது என்ன?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


Part -4
https://piraimeeran.blogspot.com/2020/07/SM4.html?m=1

Part -2

https://piraimeeran.blogspot.com/2020/07/SM2.html?m=1

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி