*அல்லாஹ்! - அவன்!- ஏன்?!* (Part-2) தேவதை(Angel), அசுரர்(satan) போன்ற நம்பிக்கைகள் சார்ந்தவற்றை எப்படி அழைப்பது? வானுலக நம்பிக்கையான தேவதை(Angel), அசுரர்(satan) போன்ற நம்பிக்கைகள் அஃறிணையாக கருதப்படுவதில்லை. ஏனென்றால், இவை மனிதனை விட அதிக ஆற்றல் பெற்றவையாக கருதப்படுகிறது. மனிதரல்லாத மேல் திணை நம்பிக்கைகளை தனியாக அடையாளப்படுத்த வார்த்தையில்லை. இருப்பதைக் கொண்டுதான் அழைக்க முடியும். மனிதரை விட தாழ்நிலையிலுள்ளவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தும் 'அது' எனும் அஃறிணைச் சொல்லை பயன்படுத்த முடியாது. மனிதரை குறிப்பிட பயன்படுத்தும் 'அவன் & அவள்' எனும் உயர்திணையைத்தான் கொடுக்க வேண்டும். அப்படித்தான் கற்பிக்கப்படுகிறது. ** தேவதை(Angel) என்பது பெண்பாலாகவும் ஆண்பாலாகவும் கற்பிக்கப்படுகிறது. ** அசுரர்(satan) என்பதும் பெண்பாலாகவும் ஆண்பாலாகவும் கற்பிக்கப்படுகிறது. இவை, ஆண்பாலில் அழைக்கப்பட்டாலும் பெண்பாலில் அழைக்கப்பட்டாலும் மனிதரை அழைப்பது போன்ற விதத்திலானது அல்ல. மனிதரை விட சற்று மேலான திணையாக கருதலாம். ¶¶ மனிதரை 'அவன் & அவள்' என்று அழைப்பது உயர்திணை. ¶¶ மனிதர் அல்லா